Categories
தேசிய செய்திகள்

“கலக்கும் கேரளா” பச்சை மண்டலத்தை நோக்கி நகர்வு.!

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட மாநிலம் கேரளா. அதனைத் தொடர்ந்துதான் டெல்லி, தமிழ்நாடு என இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா கண்டறியப்பட்டது.

தற்போது அனைத்து மாநிலங்களிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கேரளாவில் கட்டுக்குள் இருந்து வருகிறது. கொரோனாவின் தாக்கத்தை மாநில அரசுகளை படிப்படியாக குறைந்து தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எணிக்கை ஒற்றை இலக்கத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால், தற்போது சிகிச்சையில் பெற்றுவருபவர்களின் படிப்படியாக குறைந்து 16 ஆக உள்ளது. கேரளாவில்  இதுவரை 503 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதில், 484 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் இந்த வைரஸூக்கு பலியாகியுள்ளனர்.

Categories

Tech |