Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காட்டு யானை கூட்டம்… தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம்… பெண் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளது. அதனை சுற்றி அடர்ந்த வனப் பகுதிகள் இருப்பதால்  உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தேயிலைத் தோட்டங்களிலும் அதன் அருகில் வசித்து வரும் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் 1வது  பிரிவில் 44 ஆம் நம்பர் தோட்டத்தில் நேற்று வழக்கம்போல் பெண் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் .

பின்னர் பணியை முடித்துவிட்டு அந்த தோட்டத்தில் இருந்து பக்கத்து  தோட்டத்திற்கு நடந்து  சென்று கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறி தேயிலை தோட்டத்திற்குள் குட்டியுடன் வந்த மூன்று காட்டு யானைகள் புகுந்துள்ளது . இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலார்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தொழிலாளர்களை துரத்திய காட்டு யானை ஜெயமணி என்ற பெண்ணை காலால் மிதித்தது. இதில் பலத்த காயமடைந்த ஜெயமணி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த சக தொழிலாளர்கள் வனத்துறையினருக்கும் , காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு  வனத்துறையினரும் காவல்துறையினரும்  வந்து ஜெயமணி உடலை  முயன்றனர். ஆனால் அவர்களை எடுக்கவிடாமல் காட்டு யானை அங்கேயே ஆக்ரோஷமாக நின்றுகொண்டிருந்தது. மேலும் உடலை எடுக்க முயன்றவர்களை  துரத்தியது. எனவே சில மணிநேரத்திற்குப் பிறகு காட்டு யானைகளை விரட்டி அடித்த   வனத்துறையினர்  ஜெயமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஜெயமணியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Categories

Tech |