கட்டிட மேஸ்திரியின் கழுத்தை அறுத்து மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான மாதேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சத்யா என்ற மகளும், ரத்தினவேல் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சத்யா தனது கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இவ்வாறு மகள் கணவர் வீட்டில் இருந்து வந்ததால் மாதேஷ் மிகவும் கோபத்தில் இருந்துள்ளார். மேலும் தனது அக்காள் மகனுடன் திருமணம் செய்து வைத்த போதும் மகள் இப்படி இருக்கிறாரே என கோபத்தில் இருந்த மாதேஷ் மனைவி மற்றும் மகளுடன் தகராறு ஈடுபட்டுள்ளார்.
இதனை அடுத்து நீ உன் கணவர் வீட்டிற்கு செல் எனக்கூறி மாதேஷ் சத்யாவை மிரட்டியுள்ளார். மகளை திட்டியதால் கணவர் மீது கோபத்தில் இருந்த மலர் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாதேஷின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.