Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி செலுத்த முடியாததால்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கடன் பிரச்சனையால் பியூட்டி பார்லர் நிலைய உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள தீர்த்தகிரி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார் இவர் ஓட்டல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும் 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கவிதா எம்.ஜி ரோட்டில் பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார். இதனை அடுத்து தொழிலுக்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின் பணம் கடன் கொடுத்தவர்கள் அதை திருப்பிக் கேட்டு வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு கவிதாவால் பணத்தை திருப்பித் தர முடியாமல் போய்விட்டது.

இதனால் மனமுடைந்த கவிதா விஷம் குடித்த வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் படி விரைவாக வந்த காவல்துறையினர் அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்யுமாறு கூறியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |