Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விதிமுறையை மீற கூடாது… அதிகாரிகளின் கண்காணிப்பு பணி… தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடு நடவடிக்கைகள்…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வருவதால் அரசு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் ஊரடங்கின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி வருகின்றனரா என காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் ஆய்வு செய்த போது முககவசம் அணியாத 129 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து அபராதமாக 25,800 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடிகாத காரணத்தினால் காவல்துறையினர் 18 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து 9 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்த குற்றத்திற்காக 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்பின் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 28 மதுபான பாட்டில்கள், 10 லிட்டர் கள் மற்றும் 30 லிட்டர் சாராய ஊறல் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு ஊரடங்கின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக காவல்துறையினர் அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Categories

Tech |