‘தூத்துக்குடி’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் கார்த்திகா. இந்த படத்தில் “கருவாப்பையா கருவாப்பையா” என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் பெரிதும் இடம் பிடித்தவர் கார்த்திகா. இதை தொடர்ந்து தைரியம், மதுரை சம்பவம், ராமன் தேடிய சீதை, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தங்கையின் படிப்பு காரணமாக மும்பையில் சில வருடங்கள் கார்த்திகா வாழ்ந்து வந்தார். தற்போது தங்கையின் படிப்பு முடிந்துள்ள நிலையில் அவர் சென்னை திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இவர், சென்னை வடபழனியில் உள்ள மால் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றபோது ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டனர். அப்போது அவரை நீங்கள் “கருவாப்பையா கார்த்திகா” என்றபடி, சூழ்ந்து கொண்டனர். தன்னை மறக்காமல் நியாபகம் வைத்துக்கொண்ட ரசிகர்களை கண்டு மகிழ்ச்சி அடைந்த கார்த்திகா, மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகியுள்ளார். அவருக்கு சில தொலைக்காட்சிகளில் இருந்து நடிக்க வாய்ப்பு வந்துள்ளது, ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார். திரைப்படங்களில் மட்டுமே நடிப்பேன்” என்று உறுதியாக இருக்கிறார்.