கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது .
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்காவில் நேற்று கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது . இந்த சிறப்பு முகாம் அங்குள்ள தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமிற்கு வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கியுள்ளார். இதையடுத்து பேராசிரியர் வ.விசயரங்கன், வட்டார வளர்ச்சி அதிகாரியான வாசுதேவன், துப்புரவு மேற்பார்வையாளர் கோபி மற்றும் சுகாதார ஆய்வாளரான முரளி கிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர் .
மேலும் இந்த முகாமில் கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் சேவையை பாராட்டி பேராசிரியர் வ.விசயரங்கன், சிறப்புரையாற்றினார். இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் அப்பகுதியை சேர்ந்த 80 கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.