அதிக பணம் கேட்டு தொந்தரவு செய்தவர் மீது காவல்துறையினர் கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கணினி வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா பாலமுருகன் என்பவரிடம் இருந்து 80 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கி உள்ளார். இந்நிலையில் பாலமுருகன் அதிக வட்டி தொகை கேட்டு ராஜாவை அவதூறாக பேசி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து ராஜா நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.