கஞ்சா விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம்-போளூர் சாலையில் சேத்துப்பட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் தேவிகாபுரம் பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமாரை கைது செய்ததோடு அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.