Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் தேரியூர் மின்சார வாரிய அலுவலகம் அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் 3 பெரும் தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று 3 பேரில் இருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர் குலசேகரன்பட்டினம் காவடி பிறை பகுதியில் வசிக்கும் கருப்பசாமி என்பதும் மேலும் அவர்கள் 3 பேரும் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கருப்பசாமியை கைது செய்ததோடு அவரிடமிருந்த 15 கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து கருப்பசாயிடம் நடத்திய விசாரணையில் தப்பி ஓடியவர்கள் உடன்குடி தேரியூர் பகுதியில் வசிக்கும் சசிகுமார், சரத் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |