Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக முத்தையாபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.  இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் மோகன்குமார், சவேரியார்புரம் பகுதியில் வசிக்கும் மகாராஜன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |