கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெகன் திரவியபுரம் பகுதியில் வைத்து தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகனை கைது செய்ததோடு அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக அதே பகுதியில் வசிக்கும் அந்தோணிராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.