Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் வளர்த்த செடிகள்….. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!!

கஞ்சா செடி வளர்த்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்டன்விளை பகுதியில் இருக்கும் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று வீடு வீடாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 200 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் அஜய் மைக்கிள்(24) என்பது தெரியவந்தது. மேலும் அஜய் தனது வீட்டில் நான்கு கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அஜய் மைக்கிளை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த கஞ்சா மற்றும் 4 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |