தடை செய்யப்பட்ட கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமுத்திரம் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருவண்ணாமலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சமுத்திரம் நகர் பகுதியில் வசிக்கும் சுபாஷினி என்பவர் வீட்டில் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் சுபாஷினி வீட்டில் 10 லிட்டர் சாராயம் மற்றும் 100 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுபாஷினியை கைது செய்ததோடு அவர் பதுக்கி வைத்திருந்த கஞ்சா மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.