Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சந்தேகமா இருந்துச்சு…. வசமாக சிக்கிய 2 நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் பெட்ரோல் பங்க் அருகாமையில் சென்ற நிலையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அந்தோணி பிச்சை மற்றும் மரியரோஸ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் 2 பேரும் வைத்திருந்த பையை சோதனை செய்த போது கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் வைத்திருந்த இரண்டு செல்போன், 16,120 ரூபாய் பணம் மற்றும் 2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |