Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சந்தேகமா இருந்துச்சு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கும்பினிப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாட்டர் சர்வீஸ் அருகில் சந்தேகப்படும் படியாக வந்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் கைனூர் கிராமத்தில் வசிக்கும் நவீன் என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து நவீனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |