Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மொத்தம் 3 1/2 கிலோ…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள பெரிய ஊர் சேரிப்பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த குபேரனை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்து 3 1/2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் ஆறு செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |