கனமழை பெய்து வருவதால் அணையில் தண்ணீர் நிரம்பி சீறிப்பாய்ந்து ஓடுவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஏரியில் கனமழையால் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதை பொதுமக்கள் அனைவரும் கடை வாசல்களில் நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஏரியில் தண்ணீர் ஆர்ப்பரிக்கும் காட்சிகளை சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனை அடுத்து சமீப காலங்களாக ஆந்திர மாநிலத்தில் இருக்கும் சித்தூரில் கலவகுண்டா அணை திறக்கப்பட்டதினால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆற்றின் கரையோரம் இருக்கும் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏழைகளுக்கு பொன்னை அணைக்கட்டிலிருந்து கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து சோளிங்கர் ஒன்றியத்தில் இருக்கின்ற 6 ஏரிகளும் நிரம்பி வழிந்ததுள்ளது. மேலும் மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.