Categories
சேலம்

“கம்மியா மார்க் எடுத்திருக்க” மாணவியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரியில் நினைத்ததை படிக்க முடியாத காரணத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரி நகரில் நஷீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமன்னா ஆசித் என்ற மகள் இருந்தார். இவர் பிளஸ்-2 படித்துவிட்டு தற்போது கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் படிக்க விரும்பினார். அதற்கு தந்தை நஷீர் அகமது நீ குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் விரும்பிய பாடத்தை படிக்க முடியாது என்று மகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த தமன்னா ஆசித் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் தமன்னா ஆசித்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமன்னா ஆசித் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தமன்னா ஆசித் தாய் ஏற்கனவே இறந்துவிட்டதால் தந்தை நஷீர் அகமது 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

Categories

Tech |