தன்னை காவல்துறை துன்புறுத்துவதாக கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் இந்தியன் -2 படப்பிடிப்பு நடந்த போது, கடந்த மாதம் 19 ம் தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்தானதில் உதவி இயக்குனர் உட்பட 3பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக நடிகர் கமலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசேடனை அதிகாரியான நாகஜோதி முன்னிலையில் கமல் ஆஜராகி விளக்கமளித்து வந்தார்.
இந்நிலையில் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து கொடுத்து வரும் நிலையில் விபத்து குறித்து நேரடியாக காவல்துறையை அடிக்கடி தொந்தரவு செய்வதாகவும், காவல்துறை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கமல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கமலின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் மதியம் 2 மணிக்கு இந்த மனுவை விசாரிக்கின்றது.