கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூச்சிகாடு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அவனாசி குமரேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெருந்துறை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினியரிங் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவனாசி குமரேசன் வீட்டில் இருக்கும்போது அதிக நேரம் செல்போன் பார்த்து வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் காலையில் பெற்றோர் அவரவர் வேலைக்கு சென்றுவிட்டனர்.
இதனையடுத்து மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவனாசி குமரேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவனாசி குமரேசனின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.