சென்னை காசிமேடு கடல் பகுதியில் உள்ள கடற்கரை கற்களில் கணவன் மனைவியை தம்பதியினர் மனம் விட்டு பேச வந்துள்ளனர் அப்போது கணவன்-மனைவிக்கு பிரச்சினை ஏற்படுவதில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மனைவியான தேவிகா(47) என்பவர் திடீரென காசிமேடு கடற்கரையில் இருந்து கடலில் விழுந்து தற்கொலை முயற்சி செய்தார் உடனே அப்பகுதியில் கண்காணிப்பில் இருந்த N4 மீன்பிடி துறைமுக காவல் நிலைய ராவின் ஜோசப், புவனேஷ்வரன் காவலர்கள் அந்த வழியே வந்த போது கணவரான சதீஷ் மனைவியை காப்பாற்ற கதறினார்.
அவர் சத்தம் போலீசருக்கு கேட்டவுடன் சம்பவ இடத்திற்கு வந்த இரு காவலர்கள் ஒத்துழைப்போடு மீனவர்கள் இணைந்து கடலில் குறித்து பெண்ணை காப்பாற்றி உயிருடன் மீட்டனர். மேலும் முதல் உதவி செய்து பெண்ணை காப்பாற்றி உள்ளனர். துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய காவலரையும் மீனவர்களையும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.