இந்தியாவில் கொரோனா பரவல் ஓய்ந்ததையடுத்து நாட்டில் மக்கள் நடமாட்ட சாதாரணமாகி உள்ளது. இதனால் பயணங்களுக்கு அதிகரித்து உள்ளன. கொரோனாவுக்கு முன் இருந்த இயல்பு நிலைக்கு நாடு திரும்பியுள்ளது. இதனை ரயில்வே போக்குவரத்து விமான போக்குவரத்து போன்றவை வருவாய் மற்றும் பயணிகள் எண்ணிக்கை மூலம் எடுத்துக்காட்டி உள்ளது. இந்திய ரயில்வேக்கு கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் இந்த மாதம் 8ஆம் தேதி வரை கிடைத்த வருவாய் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த காலகட்டத்தில் மொத்தம் ரூ.33,476 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த வருவாய் ரூ.17, 394 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பாக்கும்போது இந்த ஆண்டு வருவாய் 92% உயர்ந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு விட 24% அதிகமான இருக்கிறது. கடந்த ஆண்டு முன்பதிவில் ரூ.16,307 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. ஆனால் இந்த வருடம் ரூ.26,961 கோடி கிடைத்து இருக்கிறது. இது 65% உள்ளது. இதனையடுத்து முன்பதிவு செய்யாத பயணிகளின் எண்ணிக்கை பொருத்தவரை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 97% அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு 90.57 கோடி பேர் பயணம் செய்து வந்த நிலையில் இந்த ஆண்டு அதை எண்ணிக்கை 268.56 கோடியாக உயர்ந்துள்ளது. அதனைப் போல முன்பதிவு செய்யாத பயணத்தில் வருவாயும் மிக அதிகமாக உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 6 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.1086 கோடி கிடைத்த நிலையில் இந்த ஆண்டு ரூ.6,515 கோடி வருவாய் கிடைத்துள்ளது.