கடன் பிரச்சனையால் பஸ் கண்டக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் திருமருகல் அருகே அம்பல் ஊராட்சி பகுதியை சேர்ந்த எழிலன் என்பவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கடன் பிரச்சினையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எழிலன் வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார் .இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்த அவர் கடந்த 12 ஆம் தேதி டிஸ்டர்ப் செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.