2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 38 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஊடுபயிர் சாகுபடி செய்யும் திட்டத்திற்கு ரூபாய் 27.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னை, மா, வாழை உள்ளிட்டவைகளின் சாகுபடிக்கு இடையே ஊடுபயிர்களில் சாகுபடியும் ஊக்குவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள், பழங்கள், மலர் சாகுபடி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க மாற்றுப்பெயர் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.