Categories
உலகசெய்திகள்

#JUSTIN: ராஜபக்சேவின் தந்தை சிலை உடைப்பு…. பெரும் பதற்றம்…!!!!

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது.

இலங்கையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டால் பெரும் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாகுபலி பட பாணியில் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை சிலையை  போராட்டக்காரர்கள் தகர்த்தெறிந்துள்ளனர்.

Categories

Tech |