Categories
மாநில செய்திகள்

JUSTIN: மேலும் ஒரு மாவட்டத்திற்கு… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையை கடந்த போதிலும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக சில மணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். முன்னதாக  காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |