தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தது. கடந்த சில நாட்களாகவே விநியோகம் செய்யப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் முதல்வர் முக. ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அதாவது உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் முக.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.