நள்ளிரவு பிரார்த்தனைகளுக்கு தடை கிடையாது என்று சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார்.
நாளை இரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பமாகவுள்ளது. அடுத்த ஆண்டு பிறக்கும் நேரத்தில் அனைவரும் கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இதற்கு எந்த தடையும் கிடையாது என்று சென்னை மாநகர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டு பிரார்த்தனைகளுக்கு எந்தவித தடையும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். கடைகள் உணவுகள் மட்டுமே 11 மணிக்குமேல் செயல்பட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கோவில்கள், தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.