Categories
மாநில செய்திகள்

#JUSTIN: திடீர் ட்விஸ்ட்…. அதிமுக வெற்றி வேட்பாளர் திமுகவில் இணைந்தார்…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை மேலூர் நகராட்சியில் வெற்றி அறிவிப்பு வந்த சில நிமிடங்களில் மேலூர் அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்தார். அதாவது மதுரை மேலூர் நகராட்சி 9ஆவது வார்டில் 15 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அருண்சுந்தரபிரபு வெற்றி பெற்று இருந்தார். இந்நிலையில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.

Categories

Tech |