நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் 15 முதல் 18 வயதுடைய சிறார்கள் அனைவருக்கும் இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனைதொடர்ந்து பேசிய முதல்வர், ஒமிக்ரானின் நோய் தாக்கம் குறைவாக இருந்தாலும் பரவல் வேகம் அதிகமாக இருக்கும். இதனிடையில் முககவசம் மட்டுமே நமக்கு கேடயமாகும். அதனால் கட்டாயம் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளார்.