தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயருடன் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை 70 உலக நாடுகளில் இந்த தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை இந்த தொற்று காரணமாக 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தொற்று தீவிரம் அடையாமல் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.