அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
க.அன்பழகன் 1977 முதல் திமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். தமிழகத்தின் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான இவருக்கு பிப்ரவரி 24ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு செயற்கை சுவாச பொருத்தப்பட்டு தொடர்ந்து 12 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
அவரின் உடல் முன்னேற்றம் அடைந்து மீண்டும் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு சூழ்நிலையில் எதிர்பார்த்த அளவு சிகிச்சைகள் பலனளிக்கவில்லை என்று தெரிகின்றது. அவையத்து மூப்பின் காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் உள்ளது என்று மருத்துவமனை வந்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூட தெரிவித்திருந்தார். இதையடுத்து தொடர்ந்து அவரின் உடல் மோசமடைந்து வருவதால் அப்பல்லோ மருத்துவமனைக்கு திமுக நிர்வாகிகள் வந்து கொண்டு இருக்கின்ற்றனர். இன்னும் சற்று நேர்தத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலினும் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்ற்றன.