தமிழகத்தில் ஆகஸ்ட்-9 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மேலும் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் வழங்குவதா? அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா? என்பது குறித்து முதல்வர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளை பின்பற்றாமல் அதிக வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.