Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#JUST IN: இன்று ஜாமீனில் வெளிவரும் ஜெயக்குமார்…. மேளதாளத்துடன் அதிமுகவினர்…!!!!

சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில்,  49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இதை அடுத்து ஏற்கனவே திமுக நபரை தாக்கிய வழக்கு,சாலை மறியல் செய்த வழக்குகளில் ஜாமீன் பெற்றிருந்த நிலையில், நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் இன்று சென்னை புழல் சிறையில் இருந்து அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீனில் வெளிவருகிறார். அவரை வரவேற்க சென்னை புழல் சிறை முன்பாக மேள தாளங்களுடன் அதிமுகவினர் குவிந்து வருகின்றனர்.

Categories

Tech |