Categories
தேசிய செய்திகள்

JUST IN:பெல் நிறுவனத்தில் ஏன் ஆக்ஸிஜன் தயாரிக்கவில்லை….உயர்நீதிமன்றம் கேள்வி….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசில் ஏன் முன்வரவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தனியாருக்கு பெரும் தொகை ஒதுக்கும் மத்திய அரசு தடுப்பூசி தயாரிக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?மத்திய அரசுக்கு சொந்தமாக எத்தனை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்ற 19ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |