விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். தற்போது மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக உள்ள ஜி.பி.முத்து சோசனஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.ஸ டிக் டாக் மூலம் பிரபலமான இவர் அதன் தடைக்கு பின்னர் யூடியூப் பக்கம் கரை ஒதுங்கினார் சோசியல் மீடியாவில் இவர் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் மிக பிரபலம். அதற்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது ஜி.பி.முத்து இரண்டாவது வாரத்தில் வீட்டின் தலைவராகியுள்ளார். இவரின் ஒவ்வொரு செயலும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்து சில நாட்களாகவே டல்லாக இருந்த ஜி.பி. முத்து தற்போது தன்னால் முடியவில்லை என்றும் ஒரு மாதிரியாக இருப்பதாகவும், தன்னுடைய தம்பிகள் ஆனந்த், மணியிடம் பேச வேண்டும் என கூறியுள்ளார். இதனால் ஜி.பி.முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார் என்று இணையதளத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் ஜி.பி. முத்துவை confession ரூமுக்கு அழைத்து பேசிய பிக் பாஸ், வீட்டில் இருந்து செய்தி கேட்டிட்டு தான் கூப்பிட்டேன். விஷ்ணு நல்லா இருக்கிறதாக தெரியப்படுத்தி இருக்காங்க. விஷ்ணு உட்பட வீட்ல இருக்கிற எல்லாருமே அப்பாவ எப்படி ஆச்சு 100 நாள் வீட்டுல வச்சுக்கணும்னு சொல்லி இருக்காங்க என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஜி.பி. முத்து, ஆனா எனக்கு இருக்க முடியல, ஒரு மாதிரி மூச்சு முட்டுது எனக்கு என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு பேசிய பிக் பாஸ், இத்தனை நாட்கள் நீங்கள் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். முதல் தலைவர் என்ற பதவியும் இரண்டு மணி நேரம் கஷ்டப்பட்டு ஜெயிச்சு வாங்கி இருக்கீங்க. இந்த முத்து தான் எனக்கு தெரிஞ்ச முத்து. வெளியே இருக்கிறவங்க உங்களை பார்த்து பல விஷயங்களை கத்துக்குறாங்க என அறிவுரை வழங்கினார். இதனையடுத்து ஜி.பி. முத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.