Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பால்பவுடர் பற்றாக்குறை… போர்க்கால நடவடிக்கை மேற்கொண்ட அதிபர்…!!!

அமெரிக்காவில் குழந்தைகளுக்குரிய பால்பவுடருக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், அதிபர் ஜோ பைடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, பெரும்பாலான தாய்மார்கள் பவுடர் பால் தான் கொடுக்கிறார்கள். இந்நிலையில், அந்நாட்டில் பால் பவுடர் தயாரிக்க கூடிய, மிகப்பெரிய நிறுவனம் ஒன்று பாதுகாப்பு காரணத்திற்காக அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால், குழந்தைகளுக்கு பால்பவுடர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

இதனை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் அதிபர் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார். பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு பாதுகாப்பு உற்பத்தி சட்டம் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

அதன்படி, பால் பவுடர் உற்பத்தியாளர்களின் விநியோகஸ்தர்கள், உற்பத்திக்கான தடைகளை நீக்குவதற்காக அந்நிறுவன ஆர்டர்களை பிற வாடிக்கையாளர்களுக்கு முன் பூர்த்தி செய்ய வேண்டும். பிறநாடுகளிலிருந்து அமெரிக்க நாட்டிற்கு பால்பவுடர் எடுத்து வருவதற்காக வணிக விமானங்களை உபயோகிக்க பாதுகாப்புத்துறைக்கு ஜோ பைடன் அங்கீகாரம் அளித்திருக்கிறார்.

Categories

Tech |