Categories
உலக செய்திகள்

3500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் எமிரேட்ஸ் நிறுவனம்.. இந்த இணையத்தளத்தில் விண்ணப்பத்தை பெறலாம்..!!

உலகின் முன்னணி விமான நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனத்தில், 3500 நபர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, உலகம் முழுக்க இருக்கும் விமான நிறுவனங்கள், தங்கள் விமான சேவையை ரத்து செய்திருந்தது. இதனால், கடந்த இரண்டு வருடங்களாக விமான நிறுவனங்கள், அதிக நஷ்டத்தை அடைந்துள்ளது. எனவே, இந்நிறுவனங்கள், நிதி நெருக்கடி காரணமாக, வேலையாட்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

எனினும் தற்போது, உலகின் பல்வேறு நாடுகளிலும், கொரோனா தொற்று குறையத்தொடங்கி இருக்கிறது. எனவே, விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் உலகின் முன்னணி விமான நிலையங்களில் ஒன்றாக விளங்கக் கூடிய எமிரேட்ஸ் நிறுவனம், 3500 நபர்களை புதிதாக பணியில் சேர்க்கவிருக்கிறது.

மேலும், அதிக விடுமுறையில் அனுப்பப்பட்டிருக்கும் தங்கள் பணியாளர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. www.emiratesgroupcareers.com என்ற இணையதளத்தில் இந்த பணி வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |