Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நாள்….. 5000 பணி நியமன ஆணை….

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று ஒரே நாளில் 5 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது

சென்னை கோயம்பேட்டில் உள்ள புனித தாமஸ் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. அன்னம்மாள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம் சார்பில் உணவகம் மற்றும் பயணம் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் அளிக்கும் வகையில் இந்த முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான ஆட்களை தேர்வு செய்தனர். இந்த முகாமில் ஒரே நாளில் சுமார் 5 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாக வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |