”இறைவன்” திரைப்படம் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் அஹமத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”இறைவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீசாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் , ”இறைவன்” திரைப்படம் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் அஹமத் தனது சமூக வலைதளபக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருக்கிறார். ‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.