ஜப்பானில் புதிய பிரதமராக ஆளுங்கட்சியை சேர்ந்த புமியோ கிஷிடா பதவியேற்கவுள்ளார்.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே கடந்த ஆண்டு உடல்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். இதனால் யோஷிஹிதே சுகா பிரதமராக பதவியேற்றார். ஆனால் இவரது தலைமையிலான அரசு கொரோனா பரவலை கையாண்ட விதம் பலனளிக்காததால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.
இதனால் தற்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் யோஷிஹிதே அவர்கள் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை. இதனையடுத்து ஆளுங்கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சி சார்பில் புமியோ கிஷிடா மற்றும் கோனோ ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை சமமாக இருந்தது. இந்த நிலையில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் கிஷிடா 257 வாக்குகள் பெற்று 170 வாக்குகளுடன் இருந்த கோனோவை தோற்கடித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்கவுள்ளார். குறிப்பாக புமியோ கிஷிடா கடந்த 2012 முதல் 2017 வரை ஜப்பான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி புரிந்துள்ளார். மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் யோஷிஹிதேவுடன் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.