Categories
உலக செய்திகள்

ஜப்பானை தாக்கிய புயல்…. படுகாயமடைந்த மக்கள்…. விமான சேவை ரத்து….!!

சாந்து புயலால் 5 பேர் படுகாயம் அடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஜப்பான் நாட்டை புயல் தாக்கியுள்ளது. இந்த புயலுக்கு சாந்து என்று பெயரிட்டுள்ளனர். மேலும் அந்த புயலானது  பசிபிக் கடலோர பகுதியின் மையத்தில் கிழக்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இந்த புயலினால் மணிக்கு 67 மைல்கள் தூரத்தில் பலத்த காற்று வீசுகிறது.

இதனை அடுத்து புயலின் காரணமாக நாகசாகி, யூயேகா மற்றும் சாகா போன்ற பகுதிகளில் இதுவரை 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இந்த புயலால் ஜப்பான் நாட்டில் மொத்தம் 49 விமானங்கள் வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |