மகரஜோதி விழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் தீ மிதித்தும், கைகளால் பலகாரம் சுட்டும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மகரஜோதி விழாவில் திரளான பக்தர்கள் அணிவகுத்துச் செல்வர். அங்கு பொங்கல் தினத்தன்று ஆண்டுதோறும் பொன்னம்பலமேட்டில் காட்சி தரும் மகரஜோதி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டு செல்வது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் பெரும்பாலான பக்தர்கள் அவரவர் இருப்பிடத்திலிருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலுள்ள குடிகிரி கிராம பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். அதில் பக்தர்கள் கொதிக்கும் எண்ணெயில் கைகளால் பலகாரம் சுட்டும், தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.