இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலியை பிசிசிஐ அதிரடியாக நீக்கப்பட்டார் .
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார் . இந்நிலையில் சமீபத்தில் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார் .இதற்கு முன்பாக டி20 அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மா உள்ளார் . இந்நிலையில் ஒருநாள் அணி கேப்டன்சிலிருந்து விராட் கோலி தானாக விலக வேண்டும் என பிசிசிஐ விரும்பியது .இதற்காக விராட்கோலிக்கு 48 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டது. ஆனால் பதவியிலிருந்து விராட் கோலி விலக மறுத்ததால் நீக்கப்பட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன .
இந்நிலையில் விராட் கோலி கேப்டன் விவகாரம் குறித்து பிசிசிஐ மீது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் சாடியுள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது,” டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு விராட்கோலி பதவி விலகுவதை பிசிசிஐ விரும்பவில்லை .அதே சமயம் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு 2 கேப்டன் இருப்பது சரியாக இருக்காது .இதன் காரணமாக தான் விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் பிசிசிஐ முடிவு சரியானதுதான் .ஆனால் இந்த விவகாரத்தில் விராட் கோலியை பிசிசிஐ நடத்திய விதம் தான் சரி இல்லை .அதோடு அவர் பதவி விலக இரண்டு நாள் அவருக்கு கெடு விதிக்கப் பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரத்தை காட்டுகிறது. அதோடு விராட் கோலிக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும் .அவர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார் ” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.