4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வில் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் உட்பட அனைத்தும் முடக்கப்பட்டன.. இதனையடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.. ஆனால் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் அனைத்தும் இயங்காமல் நிறுத்தப்பட்டே இருக்கின்றன..
இந்நிலையில் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வில் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.. 31ஆம் தேதியுடன் ஊரடங்கு தளர்வு முடிவடையும் நிலையில், மெட்ரோ, மின்சார ரயிலுக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி தந்தாலும், சூழ்நிலையை பொருத்து மாநில அரசு முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.