ஐஸ்வர்யா தனது மகன்களோடு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தனுஷும் ஐஸ்வர்யாவும் சென்ற ஜனவரி மாதத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மகன்கள் யாத்ரா, லிங்கா இருவருமே ஐஸ்வர்யாவுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா சமீபத்தில் தனது மகன்களுடன் இருக்கும் போட்டோக்களை இரண்டு முறை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதில் முதல் முறை தனுஷுக்கு போட்டியாக வெளியிட்டதாக விமர்சனங்கள் வெளியானது. அடுத்த முறை ஐஸ்வர்யாவை மகன் மடியில் உட்கார்வது என்று தேவையில்லாமல் விமர்சனங்களை இணைய தளங்களில் பரவியது.
https://www.instagram.com/p/B6DxvgYh2lN/?utm_source=ig_web_copy_link
இதனைத் தொடர்ந்து தனுஸுடன் ஐஸ்வர்யா சேர்ந்து வாழும் போது கூடத் தான் பிள்ளைகளோடு விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டார். ஆனால் அப்போது பாராட்டியவர்கள் இப்போது விமர்சிப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் பாலிவுட்டில் ஓ சாத்தி சல் படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். மேலும் ஹிந்தி மொழியில் ஒரு படத்தையும், ராகவா லாரன்ஸின் துர்கா படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.