Categories
தேசிய செய்திகள்

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பிற்கு இஸ்ரோ முழு ஆதரவு… தலைவர் சிவன் அறிவிப்பு..!!

விண்வெளி துறையில் தனியாரை அனுமதித்ததற்கு இஸ்ரோ முழு ஆதரவு அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். காணொளி வாயிலாக பேசிய அவர், விண்வெளித் துறையில் தனியார் தொழிற்துறையினர் ஈடுபட இஸ்ரோ தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க மத்திய அமைச்சரை கூட்டத்தில் நேற்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் மோடி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். வரும் 30ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடியும் நிலையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

சீனாவுடனான எல்லை பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை முடிவில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை இனி ரிசர்வ் வங்கி நேரடியாக கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியானது. 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், 58 மாநிலங்களிடை கூட்டுறவு வங்கிகள் ஆகியவை ஆர்பிஐ கட்டுப்பாட்டில் வருகிறது.

மேலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் செய்லபடுத்தப்படும் கடன் திட்டங்கள், சேமிப்பு ஆகியவை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கொடிகள் புதிய திட்டங்களை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு குறித்து பேசப்பட்டது. இதற்கு நேற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சிவன் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார்.

Categories

Tech |