தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி படங்களை இயக்கினார். அதன் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்தப் படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்தில் இணைவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு ஒருபுறம் மிக்க சர்தார் பட விழாவின்போது நடிகர் கார்த்தி கைதி 2 திரைப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்கும் என்று கூறியுள்ளார். இது தளபதி 67 திரைப்படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சர்தார் படத்தில் வெற்றி விழாவின்போது நடிகர் கார்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் தளபதி 67 திரைப்படத்தில் டெல்லி கதாபாத்திரம் உண்டா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகர் கார்த்தி கூறியதாவது, அது அவ்வளவு ஈஸி கிடையாது. ஏனெனில் 2 படங்களையும் வேறு வேறு தயாரிப்பாளர்கள் தயாரிக்கிறார்கள். இதனால் தளபதி 67 திரைப்படத்தில் டெல்லி கேரக்டரை இணைப்பது சாத்தியம் கிடையாது. அந்த ஆசை எல்லோருக்கும் இருக்கலாம். ஆனால் அது நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் கைதி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என்று கூறினார்.