ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஜாம்ஷெட்பூர் -ஹைதராபாத் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பார்வையாளர்களுக்கு அனுமதி இன்றி போட்டி நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்-ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் 41-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் கிரெக் ஸ்டெவார்ட் ஒரு கோல் அடித்தார். இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி முன்னிலையில் இருந்தது. இதையடுத்து ஹைதராபாத் அணி வீரர் ஒக்பேச்சே 56-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார் .இதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை .இறுதியாக 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.